உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை புதன்கிழமை(29.6.2022) காலை-9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
தொடர்ந்தும் பதினைந்து தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழா இடம்பெறும்.

இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை திருமஞ்ச உற்சவமும், 9 ஆம் திகதி சனிக்கிழமை கைலாசவாகன உற்சவமும், எதிர்வரும்-11 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சப்பைரத உற்சவமும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-7.30 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் புதன்கிழமை காலை-8 மணிக்கு வசந்த மண்டப பூசையைத் தொடர்ந்து தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)