
நேற்று முன்தினம் திங்கட்கிழமை(23) காலை-08.30 மணியிலிருந்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை(24) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மழை வீழ்ச்சி நிலவரப் படி பருத்தித்துறையில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 103.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை(24) காலை-08.30 மணியிலிருந்து இன்று புதன்கிழமை(25) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியால மழை வீழ்ச்சி நிலவரப் படி ஆனையிறவில் கூடிய அளவு மழைவீழ்ச்சியாக 62.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்}