நாட்டில் சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாட்டுப் புதிய சட்டங்களை அறிமுகஞ்செய்ய அரசாங்கம் தீவிரமாக ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்ற போலிச் செய்திகள், வெறுப்புணர்வைத் தூண்டுகின்ற தகவல்கள், பதிவுகள், இனங்களுக்கு இடையிலான முருகலை ஏற்படுத்தும் பதிவுகள் என்பன குறித்து விசாரணை செய்யவும், அவற்றைத் தடை செய்யவும் நோக்கில் இந்த சட்டங்களை இயற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இது தவிர, இலங்கை பத்திரிகைச் சபையின் சட்டம் பழைமை வாய்ந்ததனால் அதனை மாற்றியமைப்பதற்கும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அந்த தகவல்கள் கூறப்படுகின்றன.