தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று திங்கட்கிழமை(21.11.2022) ஆரம்பமான நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மாவீரர்வார நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.

இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)