இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாக்கிய பிச்சைக்காரன் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை இயக்கியுள்ளார். இதில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜனவரி மாதம் துவங்கிய நிலையில் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பின்போது இயக்குநர் சசி மற்றும் நடிகர் சித்தார்த்துடன் பயணித்தது இனிமையானது என்றார். இது ஒரு அருமையான கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

படமானது அக்கா தம்பி பாசத்தை புதிய விதத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. படத்தின் நடிப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷ்ம் நடித்துள்ளார்கள். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாகுகிறார். அதேபோல் இன்னோரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடித்து இருக்கிறார். இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரித்திருக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளராக சித்து குமார் இப்படத்தில் அறிமுகம் ஆகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.