எல்லா பழங்களிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளது. ஆனால் சாத்துக்குடியில் எல்லா நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தினமும் சாத்துக்குடி பழச்சாறு குடிப்பதன் மூலம் பல நன்மைகளை பெறமுடியும்.
சாத்துக்குடி பழத்தில் விட்டமின்- சி சத்து இருப்பதால் இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து புத்துணர்வுடன் இருக்க செய்கிறது. சாத்துகுடியில், நார்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கி எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்க செய்கிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் சாத்துகுடியில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி பழச்சாறு குடிப்பதன் முலம் உடலில் புதிய ரத்தம் விருத்தியாகும். உடல் அசதி இருக்காது மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
ஞாபக திறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் உதவுகிறது.சத்துகள் நிறைந்த சாத்துகுடி பல நோய்களை தீர்த்து வைத்து வருகிறது.