ஏழாலை தெற்கு மயிலங்காடு ஞானவைரவப் பெருமான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(19.6.2022) மாலை-5.30 மணிக்கு விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ச்சியாகப் பதினொரு தினங்கள் இவ்வாலய அலங்கார உற்சவம் நடைபெறவுள்ளது.
அலங்கார உற்சவ நாட்களின் 11 தினங்களும் மாலை-5.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து வசந்தமண்டபப் பூசையும், சுவாமி வீதி உலா வருதலும் இடம்பெறும் என மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அலங்கார உற்சவ காலங்களில் தினமும் மகேஸ்வர பூசையும் (அன்னதானம்) இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)