தமிழகத்தில் வெயிலின் காலம் ஆரம்பித்து உள்ளது. இதனால் பல மாவட்டங்களில் சரியாக மழை பெய்யாமால் இருந்ததால் சென்னையை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதை பற்றி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் செயலாளர் அதுல்ய மிஸ்ரா அரசாணையில் கூறியது. வடகிழக்கு பருவ காலத்தில் பெய்த மழையளவு ஆய்வு செய்யப்பட்டது. அதில் தேனி, தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை போன்ற மாவட்டங்களில் 38 வட்டாரங்கள் உள்ளது. இவை மிக பற்றாக்குறையான அளவில் மழைப் பொழிவை பெற்றுள்ளன. அந்த பகுதியில் நீலத்தடி நீர் குறைவாக உள்ளதால் கோடை காலத்தில் நீர் வறட்சி ஏற்படும் என்று இந்த 38 வட்டாரங்களை வறட்சி வட்டாரங்களாக அறிவித்துள்ளன.

இதை போன்று குறைவாக மழை பொழிவை பெற்ற சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், இராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் நீர் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அரசணை வெளியிட்டு உள்ளது.